Showing posts with label விதுர நீதி. Show all posts
Showing posts with label விதுர நீதி. Show all posts

Sunday, 13 September 2020

விதுர நீதி 11 | விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் | Bhakthi Vlog

 விதுர நீதி 11


விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்



தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு - விதுர நீதி தொடர்ச்சி

விதுரர் அடுத்து கீழ் கண்ட ஏழும் துக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே இவைகளை தவிர்க்குமாறு தெரிவிக்கிறார்.


பெண்களை அவமான படுத்துதல்

சூதாட்டம் ஆடுதல்

அதிகமான வேட்டை ஆடுதல்

கள் குடித்தல்

நல்ல வார்த்தை பேசாது இருத்தல்

சிறுகுற்றத்திற்கு அதிக தண்டனை கொடுத்தல்

பணத்தை விரயம் பண்ணுதல்


இவ்வாறு இந்த காரியங்களை செய்தால் அது துக்கத்தில் கொண்டு போய்  விட்டு விடும் என்று விதுரர் கூறியுள்ளார். மேற்கொண்டு அடுத்த அத்தியாத்தில் காண்போம்.


Sunday, 19 July 2020

விதுர நீதி பகுதி-2

விதுர நீதி பகுதி-2

- - - - - - - - - - - - - - - - - - - - - - -
கீதா விதுரநீதிச்ச தர்மா :
    சாந்த நவேரிதா : |
ந ச்ருதா பாரதே யேந
    தஸ்ய ஜந்ம நிரர்தகம் ||

விதுரர் கூறும் தர்ம நீதிகள்
- - - - - - - - - - - - - - - - - - - - -

பொதுவான தர்மங்கள்

 அடுத்தவர்களுக்கு கொடுக்காமல்,
  யார் சிறப்புடைய உணவினை
  உண்கிறார்களோ,
சிறந்த துணிமணிகளை தான்
  மட்டுமே உடுத்தவேண்டும் என்று
  நினைக்கிறார்களோ,
அவனை விட கொடியவன் வேறு
ஒருவனும் இருக்கமாட்டார்கள்.

ஒருவன்  பாவங்களை செய்கிறான்.
அந்த பாவத்தால் மக்கள் துன்பம்
அடைகிறார்கள்.
இதில் துன்பப்பட்ட மக்களுக்கு,
  தோஷத்தினால் வரும்
  பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
ஆனால் செய்தவன் தோஷத்தினால்
  வரும் பாபத்திலிருந்து
  விடுபடுவதில்லை

வில்லிலிருந்து  புறப்பட்ட அம்பு
ஒருவனை தாக்கும், அல்லது
தாக்காமலும், இருக்கலாம்.
நன்மை தீமைகளை அறிந்து  
 சொல்லப்படும் சொல்லுக்கு,  
 - நல்லதும் நடக்கும்,
 - கெட்டதும் நடக்கும்.
ஆகவே
நட்பு,-=பகை, -=தேவையற்றது,=
என்ற நிலைகளை கருத்தில்கொண்டு,  

= நயமான சொல்,
= பாராட்டு செய்தல்,
= ஒப்பீடு செய்தல்,
= அடக்குமுறை செய்தல்,
போன்ற நான்கு முறையிலும்,
செயல்படுத்தி வெற்றி அடைய
வேண்டும்.

ஐந்து  இந்திரியங்களை
(மெய் - வாய் -கண் - மூக்கு - செவி)
வெற்றி கொண்டு,

ஆறு வகையான வழிபாட்டு
முறைகளை அறிந்து,  

ஏழு கெட்டவைகள்
(-பெண் மோகம், -சூதாட்டம்,
-வேட்டை,-மதுபானம்,
-கடுஞ்சொல், -கடுந்தண்டனை,
-ஊதாரித்தனம்)
ஆகிய பழக்கங்களை வெறுத்து,
மேன்மையை அடைய
வேண்டும்.  

 விஷம் யாரிடம் சேர்கிறதோ
  அவன் மரணமடைகிறான்.
ஆயுதமும் யாரிடம் சேர்கிறதோ
  அவன் மரணமடைகிறான்.

அதனால், தவறான ஆலோசனைகள்,
தேசத்தை,
தேசமக்களை,
அரசனையையே,
கொன்று விடும்.

விதுர நீதி பகுதி - 2
===========





திருதிராஷ்ட்ரர்: விதுரா! நீ மாபெரும் அறிஞன். இதுவரை கூறியதைப் போன்ற மேலும் பல நல்ல அறிவுரைகளை எனக்கு விளக்கிச் சொல்வாயாக. உன் சொற்கள் நற்பண்புகளை வலியுறுத்துகின்றன. உலக நன்மைக்கான விஷயங்களால் நிரம்பி விளங்குகின்றன. அவை அழகு ததும்பும் உண்மைகலாக வெளிப்படுகின்றன. என் மனம் திருப்தியுறாமல் மேலும் கேக விழைகிறது. 

விதுரர் கூறலானார்: "மன்னா! மனிதர்களில் முதல் தரமான மனிதன் உலகிலுள்ள அனைவரும், அனைத்தும் சௌக்கியமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான். அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான். அவன் உண்மையையே பேசுவான். கனிவுடன் பழகுவான். உடல்-மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்.

நடுத்தரமான மனிதன் வாக்குறுதிகள் கொடுப்பான். அவற்ரை நிறைவேற்றியும் தருவான். எதுவும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுட்தும் விடுவான். பிறரிடம் குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பான்.

மனிதர்களில் கீழானவர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள். எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள். பாவச் செயல்களில் ஈடுபடுவார்கள். பயங்கரமாகக் கோபப்படுவார்கள். நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர். சில சமயம் நல்லவர்கள் போல் பழகினாலும் அவர்கள் கொடிய மனம் உடையவர்களே.

கீழ்தரமானவன் பெரியவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளின் படி நடந்து கொள்ள மாட்டான். அந்த ஆலோசனைகளால் நன்மை விளையுமென அவன் நம்புவதில்லை. அவன் தன்னையே சந்தேகப்படுபவனாக இருப்பான். தன்னுடைய நண்பர்களைக் கூடக் காட்டிக்கொடுத்துவிடுவான்.

பொறாமை கொள்ளாதிருத்தல், நேர்மையான பேச்சு, உள்ளத் தூய்மை, போதுமென்ற மனத்திருப்தி, எரிச்சலூட்டாத இனிய பேச்சு, மனக்கட்டுப்பாடு, வாய்மை, மனவுறுதி இம்மாதிரியான நற்பண்புகளைத் தீயவர்களிடம் எதிர்பாக்க முடியாது.

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புகிறவன் மேற்கூறிய மூவகை மனிதர்களில் உத்தமமான மனிதர்களை மட்டும் அணுக வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நடுத்தரமான மனிதர்களை அணுகலாம். ஆனால் ஒரு போதும் கீழ்த்தரமான மனிதர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.