Showing posts with label வாழ்க்கையில் ஜெயிக்க எந்த தெய்வத்தை வழிபடலாம்?. Show all posts
Showing posts with label வாழ்க்கையில் ஜெயிக்க எந்த தெய்வத்தை வழிபடலாம்?. Show all posts

Friday, 27 October 2017

வாழ்க்கையில் ஜெயிக்க எந்த தெய்வத்தை வழிபடலாம்?

வாழ்க்கையில் ஜெயிக்க எந்த தெய்வத்தை வழிபடலாம்? - ஜோதிடர் பதில்கள்!

1. வாழ்க்கையில் வெற்றி பெற, எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
✳ தொழிலில் வெற்றி பெற பெருமாளை வணங்க வேண்டும்.

✳ எதிரிகளை வெல்ல வராகியை வணங்க வேண்டும்.

✳ உடல் நலம் பெற தன்வந்திரியை வணங்க வேண்டும்.

✳ எல்லா வளங்களையும் பெற, அவரவர் குலதெய்வத்தை வணங்க வேண்டும்.

2. ஏன் குழந்தை பிறப்பதற்கு முன் தாடி வைக்கவேண்டும் ?
✳ கரு உருவான ஐந்தாவது மாதத்தில் இருந்து குழந்தையின் தந்தை மொட்டை அடித்தல், சவரம் செய்தல் போன்ற செயல்களை செய்யக்கூடாது.

✳ இது அவரவர் குல வழக்கம் மற்றும் சுய விருப்பத்தைச் சார்ந்தது.

✳ தாடி வளர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

3. ராகு திசை விலகும் போது என்ன பலன்களை தரும்?
✳ ராகு திசை ஆரம்பிக்கும் போது செல்வத்தை கொடுத்து இருந்தால், முடியும் போது விரயத்தை கொடுப்பார்.

✳ ராகு திசை ஆரம்பிக்கும் போது விரயத்தை கொடுத்து இருந்தால், முடியும் போது செல்வத்தை கொடுப்பார்.

4. பூரட்டாதி 3-ம் பாதம் நட்சத்திரத்திற்கு எந்த வயதில் அரசு வேலை கிடைக்கும்?
✳ முழுமையான ஜாதகத்தை கொண்டு தான் எந்த வயதில் கிடைக்கும் என்று தெளிவாக கூற இயலும்.

✳ பூரட்டாதி 3 பாதம் கும்ப ராசி ஆகும். ராசிக்கு 10ம் வீடு செவ்வாய் வீடாக வருவதால் கண்டிப்பாக அரசு உத்தியோகம் உண்டு.

✳ செவ்வாய் நீச்சமோ அல்லது பகை பெற்றாலோ பதவியின் தரங்கள் குறையும்.

5. வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா?
✳ வீட்டில் குருவி கூடு கட்டுவது நல்லது.

✳ குருவி கூடு கட்டுவது தனிக்குடும்பம் ஒன்றிணைந்து கூட்டு குடும்பமாக மாறும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

✳ குருவி கூட்டை கலைப்பது பொருளாதார வீழ்ச்சி மற்றும் குடும்பப் பிரிவினையை குறிக்கிறது.