Showing posts with label வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம். Show all posts
Showing posts with label வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம். Show all posts

Friday, 10 January 2020

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

ஸரஸ்வதி

ஸ்ருஷ்டி செய்கிற பிரம்மா, பரிபாலிக்கிற விஷ்ணு, ஸம்ஹார ருத்ரன், மாயையின் அதிபதியான ஈசுவரன் இவர்களை நாலு கால்களாக் கொண்ட மஞ்சத்தில், சாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியான காமேசுவரி வீற்றிருக்கிறாள்; பரப் பிரம்மமான காமேசுவரியின் இடப்புறத்தில் அநுக்கிரஹ மூர்த்தியாக அமர்ந்திருக்கிறாள். காமேசுவரன் பிரம்மம், காமேசுவரி பிரம்மசக்தி; இவர்கள் ஸதிபதிகள்.

காமேசுவர – காமேசுவரி என்கிற சிவப்பு பிரிந்தவுடன் மற்ற வர்ணங்களும் வெளியே ஒடிவர வேண்டுமல்லவா? இந்த நியாயப்படி செம்மஞ்சளான பிரம்மாவும் லக்ஷ்மியும் வெளிப்பட்டார்கள். நீலமான மகாவிஷ்ணுவும் பார்வதியும் ஆவிர்பவித்தார்கள். வெள்ளையான ருத்திரனும் ஸரஸ்வதியும் தோன்றிவிட்டார்கள்.

ப்ரஹ்ம சக்தியிலிருந்து இரட்டை இரட்டையாகத் தோன்றிய இந்த மூன்று ஜோடியில் ஒவ்வொரு ஜோடியும் சகோதர சகோதரிகள். அதாவது ப்ரஹ்மாவும் லக்ஷ்மியும் உடன் பிறப்புகள்; விஷ்ணுவும் பார்வதியும் உடன் பிறப்புகள்; ருத்திரனும் ஸரஸ்வதியும் உடன் பிறப்புகள். ப்ரஹ்மாவுக்கும் லக்ஷ்மிக்கும் தங்க நிறம்; தாமரை ஆசனம்.

ப்ரஹ்மம் ஜீவராசிகளைப் பெருக்கினார்; லக்ஷ்மி, அவர்களின் அநுபோகத்துக்கான ஐஸ்வர்யத்தைப் பெருக்கினாள். நீலமேக சியாமள வர்ணம் கொண்ட விஷ்ணுவும் பார்வதியும் இப்படியே உடன் பிறந்தவர்கள். பரிபாலனமும் மாயா விலாஸமும் முக்கியமாக இருக்கிற நிலை அது. சிவன் கோவில் வடக்குப் பிரகாரத்தில் உள்ள துர்க்கையைப் பாருங்கள். அவள் பதியோடு இல்லாமல் தனித்து இருக்கிற அம்பாள். அவள் விஷ்ணு மாதிரியே சங்கு சக்கரம் வைத்துக் கொண்டிருப்பாள். நாராயணி, சியாம கிருஷ்ண சகோதரி என்றெல்லாம் இதனால்தான் பார்வதியைச் சொல்வது.

சிவனும் ஸரஸ்வதியும் சகோதர சகோதரிகள். சிவன் கோயில் தெற்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிர்வெட்டாக, பத்தினி சம்பந்தம் இன்றி, அதாவது பார்வதியின் கலப்பில்லாமல் தனித்து ஸ்வச்சமாக இருக்கிற தக்ஷிணாமூர்த்தியைப் பார்த்தால், அவர் ஸரஸ்வதியின் உடன் பிறப்பு என்று தெரியும். ஸரஸ்வதி மாதிரியே அவர் புஸ்தகமும் ஜப மாலையும் வைத்திருப்பார். இருவரும் ஞான மூர்த்திகள். இருவரும் வெளுப்பு.

ப்ரஹ்ம சக்தியிலிருந்து மூன்று ஜோடிகள் தோன்றியதற்குக் காரணம் உண்டு. இவர்களுக்குள் ஒவ்வோர் ஆணும் ஒரு பெண்ணை மணந்தாக வேண்டும். இரண்டே ஜோடி இருந்தால் பெண் கொடுத்து பெண் வாங்கினதாகும். அது யுக்தமில்லை. அதனால்தான் மூன்று சகோதர ஜோடிகள் பராசக்தியில் தோன்றின. ப்ரஹ்மா சிவனின் சகோதரியான சரஸ்வதியை மணந்தார். சிவன் மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியை மணந்தார். மகாவிஷ்ணு ப்ரஹ்மாவின் சகோதரியான லக்ஷ்மியை மணந்தார்.

வெள்ளை என்பது ஸத்வ குணம்; செம்மஞ்சள் ரஜோ குணம். நீலம் அல்லது கறுப்பு தமோ குணம். ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்திரர்களை அப்படி அடியோடு தனித்தனியாக்கி முக்குணங்களாகப் பிரித்ததோடு நின்று விடாமல், ஸமரஸத்தைக் காட்டவே அவர்களுடைய சக்திகளான ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகியோர் அவர்களது நிறங்களுக்கு மாறுபட்ட நிறமாக இருக்கிறார்கள்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 137 / நாமம் 704 – ஸரஸ்வதி  - தெள்ளிய ஞானத்தின் வடிவமாக திகழ்பவள்

பெரியவா சரணம்!

தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்



காமேச பத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா

ஸாக்ஷாத் ஈச்வரன் அம்பாளுக்கு மங்கல்ய தாரணம் செய்தான் அல்லவா?

"விவாஹ வ்யாநத்த ப்ரகுண குண-ஸங்க்யா ப்ரதிபுவ:"

“விவாஹ வ்யாநத்த”: விவாஹத்தில் கட்டப்பட்டது. அந்த மங்கள ஸூத்ரம் எப்படிப்பட்டது? ; “குண-ஸங்க்யா” – குணங்களின் என்ணிக்கையைக் கொண்டது; “ப்ரகுண” – உயர்ந்த குணத்தைக் கொண்டது.”

மங்கள ஸூத்ரம் குணங்களின் எண்ணிக்கை கொண்டது, உயர்ந்த குணம் கொண்டது என்றால் ஒன்றும் புரியவில்லையே! குணங்களின் எண்ணிக்கை என்னும்போது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றைச் சொல்கிறார். மறுபடி ‘ப்ரகுணம்’ என்கிறபோது ‘குணம்’ என்றால் ‘நூலிழை’ என்று அர்த்தம்.

‘ப்ரகுணம்’ என்றால் முக்யம் வாய்ந்த நூலிழை; ஸாதாரண நூலாயில்லாமல் மங்கள ஸூத்ரமாக இருப்பது என்று அர்த்தம். அதாவது, குணங்களின் எண்ணிக்கையான மூன்று உயர்ந்த இழைகளை முறுக்கி அம்பாளின் மாங்கல்ய ஸூத்ரம் பண்ணப்பட்டிருக்கிறது என்கிறார்.

அந்த மூன்று இழைகளையும் ஞாபகப்படுத்துவதாக, அவற்றுக்கு உத்தரவாதமாக – “ப்ரதிபுவ:” என்றால் ‘காரண்டி’  (guarantee) கொடுப்பது’ அப்படிப்பட்ட காரண்டியாக – அம்பாளுடைய கழுத்து ரேகை மூன்றும் இருக்கின்றனவாம்! இங்கே முக்குணங்களுக்கும் அவை ரூபகமாக இருப்பதாக இன்னொரு உள்ளர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.

“பாணிக்ரஹணந்தான் விவாஹத்தில் முக்யம். அதுதான் சுத்த வைதிகம். நம் தேசத்தின் ஸகலப் பிராந்தியங்களிலும், ஸகல ஜாதியார் கல்யாணங்களிலும் அதுதான் இருக்கிறது. தாலி கட்டுவது என்பது சில பேருக்கு இல்லை” என்று சொல்கிறவர்கள் சொன்னாலும், ஆசார்யாள் அம்பாளுக்கு ஈச்வரன் மங்கள ஸூத்ரம் கட்டியதாக இங்கே சிறப்பித்துச் சொல்லிவிட்டதால் அதற்கு முக்யத்வம் உண்டாகிவிடுகிறது!

பாணிக்ரஹணம் என்பதில் ஸுமங்கலித்வத்துக்கான பெர்மனெண்ட் அடையாளம் எதுவும் இல்லை. கையைப் பிடித்து, விட்டு விட்டால் அதோடு போகிறது!

“தொங்கத் தொங்கத் தாலியுடன்” என்று மங்கள ஸூத்ரந்தான் ஸுமங்கலித்வத்துக்கு அடையாளமாக என்றைக்கும் இருக்கிறது. ரொம்பவும் பூஜிதம் என்று கார்த்தாலே எழுந்தவுடன் ஸ்திரீகள் அதைக் கண்ணிலே ஒற்றிக் கொள்வார்கள். காரடை நோன்பு என்று மாசி-பங்குனி ஸந்தியிலே அதற்குத்தான் பூஜை நடக்கிறது.

ஸஹஸ்ரநாமத்திலேயும், “காமேச பத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா” [காமேச்வரனால் கட்டப்பட்ட மங்கள ஸூத்ரத்தால் சோபிக்கிற கழுத்தை உடையவள்’] என்று வருகிறது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 12 / நாமம் 30 – காமேச பத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா

பெரியவா சரணம்!