Showing posts with label Spirutuals. Show all posts
Showing posts with label Spirutuals. Show all posts

Tuesday, 30 October 2018

அவரவர் பார்வையில்.... எண்ணங்கள்...

அவரவர் பார்வையில்.... எண்ணங்கள்...

ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான்.

கடவுள் அவன் தவத்தை மெச்சி ,
‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார்.

‘மற்றவர்களின் மனதில்...
 என்னைப்பற்றி.. என்ன நினைக்கிறார்கள்....
என்று..
 உணர்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான்.

கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.

சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ....

,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றான்.

‘ஏன்?’ என்றார் கடவுள்.

‘அனைவருமே.....
 என்னை பொய் சொல்கிறவன்,.... பொறாமை பிடித்தவன்,....
 அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி....நயவஞ்சகன்.......

என்றெல்லாம் நினைக்கிறார்கள் என்னால் தாங்க முடியவில்லை’.. சாமீ....  என்றான்.

‘அப்படியா, இந்த ஆலமரத்தின் அடியில்.. கண்களை மூடிப் படுத்துக் கொள்....
 என்ன நடக்கிறது என்று கவனி’ என்றார் கடவுள்.

அப்படியே செய்தான் பக்தன்.

அப்போது ஒரு குடிகாரன் வந்தான்.....

,’யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் ‘என்று சொல்லி விட்டுப் போனான்.

பிறகு ஒரு திருடன் வந்தான்......

 ‘ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு நோயாளி வந்தான்.....

 ‘பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு துறவி வந்தார்,....

 ‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ என்று சொல்லி விட்டுப் போனார்.

சிறிது நேரம் கழிந்தது....
 கடவுள் பக்தனிடம் வந்தார்.

‘பார்த்தாயா....????

 உன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள்...

 இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே....!!!

ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும்....
 உன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல்...

 வெற்றி உனக்குத்தான்’ என்றார்.
பக்தன் தெளிவடைந்தான்....

நமது...
வாழ்க்கையில்... தொழிலில்..... இல்லத்தில்..... நட்பில்...... பாசத்தில்.... ஏன்.. வாகனப்பயணத்தில்...

மற்றவர்கள்....
என்ன...? ? எப்படி..???. என...
நம்மை நினைப்பார்களோ...!!!!!!????,,

என்று எண்ணிடாமல்..
கடிவாளம் போட்டு... வண்டியிழுக்கும்.... குதிரையைப்போல...

நீ...அடையும் இலக்கை..!!!!     நோக்கி பயணித்திடு....
நற்காலை, பொழுதின் வணக்கம்.

Monday, 7 May 2018

புல் சாப்பிட்ட நந்தி

புல்  சாப்பிட்ட  நந்தி
கல் நந்தி புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச்
 செய்ய வேண்டும் என்று ஹரதத்தர் மனமுருக வேண்டினார்.








கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று, சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.

பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து ‘சிவ.. சிவா’ என்று கத்தினான்.

குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர், தேவசர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர், ‘நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது’ என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.

ஆனாலும் கூட ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத்திருந்தார்கள்.

ஒரு நாள் ஹரதத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

அப்போது ஹரதத்தர், தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, ‘நீ சிவ.. சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்’ என்றார்.

அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ‘கல் நந்தி எப்படி புல் சாப்பிடும்’ என்பதால் வந்த நகைப்பு அது.

ஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில், ‘இறைவா! உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினார்.

என்ன ஆச்சரியம்.. தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும், பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.

இந்த கல் நந்தி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கிறது. திருவாரூர்- கும்பகோணம் சாலையில் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கஞ்சனூர்.

 சர்வம்சிவார்ப்பணம்

Saturday, 11 November 2017

ஆதிசங்கரரும் செந்திலாண்டவனின் நீறும் !

ஆதிசங்கரரும்
செந்திலாண்டவனின் நீறும் !

ஆதி சங்கரருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், செய்வினை செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்தது சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள்.
பாம்பு போன்று ஊர்ந்து செல்வதைப் போன்ற அமைப்புடன் சொற்றொடர்களை அமைத்துப் பாடும் வடமொழி யாப்பு இப்புஜங்கம். 

 பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.

சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.

2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.

3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர்.

 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.

5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.

6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார்.

 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.

மூன்றாம் பாடல்:

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம்

மகாதேவரின் திருகுமாரனே! அழகிய மயிலேறும் செந்தில் வேலவனே! மகாவாக்கியங்களின் சாரமாக விளங்குபவனே! பேரழகுப் பொலிவுடன் கூடிய திவ்யத் திருமேனியை உடையவனே! மாமுனிவர்களின் இதயத்தில் உறைந்தருள்பவனே! நால்வேதத்தின் கருப்பொருளாய் விளங்குபவனே! தாமே அண்டகோடிகள் அனைத்திற்கும் இறைவனாவீர்!

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

Friday, 13 January 2017

ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசநேஸ்வரி

ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசநேஸ்வரி 

ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.

சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கர பகவத்பாதாள் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல் லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.

ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.
ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.

பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.

தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை, ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீ கணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .

ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.
நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர். இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரமஹாமேரு. ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.

குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீசக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.
ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.

Thursday, 13 October 2016

அவசியம் படியுங்கள் - Must Read & Share

1) ப்ரம்மாவின் பிள்ளை மரீசி
మరీచి కొడుకు కాశ్యపుడు.
2) மரீசியின் பிள்ளை காஸ்யபன்.
కాశ్యపుడు కొడుకు సూర్యుడు.
3) காஸ்யபரின் பிள்ளை சூரியன்.
సూర్యుడు కొడుకు మనువు.
4) சூரியனின் பிள்ளை மனு.
మనువు కొడుకు ఇక్ష్వాకువు.
5) மனுவின் பிள்ளை இக்ஷாவக:
ఇక్ష్వాకువు కొడుకు కుక్షి.
6)  இக்ஷாவகனின் பிள்ளை குக்ஷி.
కుక్షి కొడుకు వికుక్షి.
6) குக்ஷியின் பிள்ளை விகுக்ஷி.
వికుక్షి కొడుకు బాణుడు.
7)  விகுக்ஷியின் பிள்ளை பாணு
బాణుడు కొడుకు అనరణ్యుడు.
8) பாணுவின் பிள்ளை அரண்யகன்.
అనరణ్యుడు కొడుకు పృధువు.
9) அரண்யகனின் பிள்ளை வ்ருத்து.
పృధువు కొడుకు త్రిశంఖుడు.
10) வ்ருதுவின் பிள்ளை த்ரிசங்கு.
త్రిశంఖుడు కొడుకు దుంధుమారుడు.(లేదా యువనాశ్యుడు)
11) த்ரிசங்குவின் பிள்ளை துந்துமாரன் (யவனாஸ்யன்)
దుంధుమారుడు కొడుకు మాంధాత.
12) துந்துமாரனின் பிள்ளை மாந்தாதா.
మాంధాత కొడుకు సుసంధి.
13) மாந்தாதாவின் பிள்ளை சுசந்தி.
సుసంధి కొడుకు ధృవసంధి.
14) சுசந்தியின் பிள்ளை துருவசந்தி.
ధృవసంధి కొడుకు భరతుడు.
15) துருவசந்தியின் பிள்ளை பரதன்.
భరతుడు కొడుకు అశితుడు.
16) பரதனின் பிள்ளை ஆஷிதன்.
అశితుడు కొడుకు సగరుడు.
17) ஆஷிதனின் பிள்ளை சாகரன்.
సగరుడు కొడుకు అసమంజసుడు.
18) சாகரனின் பிள்ளை அசமஞ்சன்
అసమంజసుడు కొడుకు అంశుమంతుడు.
19) அசமஞ்சனின் பிள்ளை அம்சமந்தன்.
అంశుమంతుడు కొడుకు దిలీపుడు.
20)அம்சமஞ்சனின் பிள்ளை திலீபன்.
దిలీపుడు కొడుకు భగీరధుడు.
21) திலீபனின் பிள்ளை பகீரதன்.
భగీరధుడు కొడుకు కకుత్సుడు.
22) பகீரதனின் பிள்ளை காகுஸ்தன்.
కకుత్సుడు కొడుకు రఘువు.
23) காகுஸ்தனின் பிள்ளை ரகு.
రఘువు కొడుకు ప్రవుర్ధుడు.
24) ரகுவின் பிள்ளை ப்ரவருத்தன்.
ప్రవుర్ధుడు కొడుకు శంఖనుడు.
25) ப்ரவருத்தனின் பிள்ளை சங்கனன்.
శంఖనుడు కొడుకు సుదర్శనుడు.
26) சங்கனின் பிள்ளை சுதர்மன்.
సుదర్శనుడు కొడుకు అగ్నివర్ణుడు.
27) சுதர்மனின் பிள்ளை அக்நிவர்ணன்.
అగ్నివర్ణుడు కొడుకు శ్రీఘ్రవేదుడు.
28) அக்நிவர்ணனின் பிள்ளை சீக்ரவேது
శ్రీఘ్రవేదుడు కొడుకు మరువు.
29) சீக்ரவேதுவுக்கு பிள்ளை மருவு.
మరువు కొడుకు ప్రశిష్యకుడు.
30) மருவுக்கு பிள்ளை ப்ரஷீக்யன்.
ప్రశిష్యకుడు కొడుకు అంబరీశుడు.
31) ப்ரஷீக்யனின் பிள்ளை அம்பரீஷன்.
అంబరీశుడు కొడుకు నహుషుడు.
32) அம்பரீஷனின் பிள்ளை நகுஷன்.
నహుషుడు కొడుకు యయాతి.
33) நகுஷனின் பிள்ளை யயயாதி.
యయాతి కొడుకు నాభాగుడు.
34) யயாதியின் பிள்ளை நாபாகு.
నాభాగుడు కొడుకు అజుడు.
35) நாபாகுவின் பிள்ளை அஜன்.
అజుడు కొడుకు ధశరథుడు.
36) அஜனின் பிள்ளை தசரதன்.
ధశరథుడు కొడుకు రాముడు.
36) தசரதனின் பிள்ளை ராமர்.
ఇది రాముడి వంశ వృక్షమట ...🌹
இது வால்மீகி கூறும் ராமரின் வம்ச வ்ருக்ஷம்

Thursday, 5 May 2016

பஞ்சகச்சம் & மடிசார்

பஞ்சகச்சம்  &  மடிசார்

குக்ஷித்வயே ததா ப்ருஷ்டே நாபௌ த்வௌ பரிகீர்த்திதௌ
பஞ்சகச்சா:ஸ்து தே ப்ரோக்தா: சர்வ கர்மஸு ஷோபனா: -....

குக்ஷி என்றால் இடுப்பு,
குக்ஷித்வயே = இரண்டிடுப்பில் ( வலது இடுப்பில் ஒன்று இடது இடுப்பில் ஒன்று )
ததா = அவ்வாறு
ப்ருஷ்டே =பின்புறத்தில் ஒன்று
நாபௌ = தொப்புளில் இரண்டு
கச்சம் என்றால் சொருகுதல்
பஞ்சகச்சா: = ஐந்து சொருகலானது
சர்வ கர்மஸு = எல்லா காரியங்களிலும்
ஷோபனா: = மன்களகரமானதாக
ப்ரோக்தா: = கூறப்படுகிறது

அதாவது வலது இடுப்பில் ஒரு சொருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து சொருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது..

கேள்வி :
மடிசார், பஞ்சகச்சம் போன்ற விசேஷ உடைகளை பற்றி சற்று விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்?..............
பதில் :
உங்கள் கேள்விலேயே உங்களை அறியாமல் ஒரு தவறு நுழைந்துள்ளது.

மடிசார், பஞ்சகச்சம் போன்றவைகள் விசேஷ உடைகள் அல்ல.

அவை நாம் நித்யம் அணிய வேண்டியவைதாம்.

என்ன செய்ய, காலத்தின் கோலம், எவையெல்லாம் சர்வ சாதாரணமாக இருந்ததோ,
அவையெல்லாம் இன்று முக்கிய விசேஷங்களில் சம்பந்தப்பட்டவைகளாகி விட்டன.

சரி, உங்களது கேள்விக்கு வருவோம். விசேஷ தினங்களிலாவது இவற்றை அணிந்துதான்
ஆக வேண்டும்.

இல்லாவிட்டால் கர்மாக்கள் நஷ்டமாகும்.

மேலும் இவற்றை அணிவதொன்றும் பெரிய பிரம்மவித்தை அல்ல.

அப்யாஸம் செய்தால் சுலபமாகப் பழக்கமாகி விடும்.............. மற்றொன்றையும் இந்த சமயத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன். 
 
இன்று சுடிதார், பேண்ட் போன்றவைகள் பழக்கத்திற்கு வந்துவிட்டன. சமுதாயமும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது. அவை இருந்துவிட்டுப் போகட்டும். 
 
ஆனால் குறைந்தது கோவில்களுக்கும், வேத பாராயணம் நடக்கும் இடங்களுக்கும், ஆச்சார்ய ஸ்வாமிகள் போன்ற மஹான்களை தரிசிக்கச் செல்லும் பொழுதாவது, இவற்றைத் தவிர்த்து, புடவை வேஷ்டியில் செல்வது உசிதம்.

மடிசார்......................a method in which sari is worn by married women of the tamil brahmin community............தமிழ்நாட்டு அந்தணர்களில் திருமணமானப் பெண்கள் புடவை அணியும் பாணி மடிசார் எனப்படும்.
 
பழைய பழக்கங்களின்படி திருமணமானதும் பிராமணப் பெண்கள் தினமும் இந்தப் பாணியில்தான் புடவை அணியவேண்டும்.
 
சமையலும் குளித்துவிட்டு மடியாக, சுத்தமாக இந்தப்பாணி புடவைக் கட்டிக்கொண்டுதான் செய்யவேண்டும்...மடியை சார்ந்த பாணி என்பதால் மடிசார் கட்டு என்பர்.
 
இந்த பாணியில் இருவகை உண்டு...வைணவ மதத்தினர் (ஐயங்கார்) புடவையின் மேல் தலைப்பை இடது பக்கமாகவும், சைவ மதத்தினர் (ஐயர்) வலது பக்கமாகவும் மடித்து அணிவர்.
 
மடிசார் கட்டுவதற்குப் புடவையின் நீளம் அதிகமாகத் தேவைப்படுமென்பதால் ஒன்பது கெஜம் நீளமுள்ளப் புடவையே கன கச்சிதமான மடிசார் கட்டுக்குப் பயன்படுகிறது...தற்காலத்தில் தினமும் மடிசார் கட்டுவதில்லை.
 
விசேட காலங்களில்தான் கட்டுகின்றனர்...சம்பிரதாயமானது அல்ல என்றாலும் சற்று எளிதான முறையில் ஆறு கெஜம் நீள புடவையிலும் மடிசார் கட்டும் முறை தற்போது நடைமுறையிலுள்ளது.
 
முறையான மடிசார் பாணியில் கட்டியப் புடவை எந்தச் சூழ்நிலையிலும் பெண்களின் உடலிலிருந்து நழுவாது,வழுவாது, அவிழாது, பறக்காது என்பதே சிறப்பாகும்.
 
பட்டு, பருத்தி முதலான எல்லாவிதமான துணிகளிலும் மடிசார் புடவைகள் ஆயத்தமாகக் கிடைக்கின்றன.

Meditation

Why Meditation is necessary?

Info from Medical Angle:

From the time of our birth till death the heart works continuously. Everyday the heart pumps 7,000 litres of blood, of which 70% blood is pumped to the brain and the remaining 30%  to the rest of body.

The blood is pumped through veins/arteries which are about more than 70,000 km long.

The strength required to pump the blood up to 42 ft high and weight of 1 tonne is generated by the heart everyday through its work.

We take rest when we are tired but if the heart takes rest for 4-5 mins we will have to rest forever.

How does the heart work so efficiently and effectively?

Heart works effectively because it follows a discipline.

In normal conditions the heart takes 0.3 secs to contract (systole) and 0.5 secs to relax (diastole).
So 0.3+0.5=0.8 secs are required by the heart to complete one beat (1 cardiac cycle).
That means in 1 min, the heart beats 72 times which is considered as normal heart beat.
During the relaxing phase of 0.5 secs the impure blood travels through the lungs and becomes 100 % pure.

In some stressful conditions the body demands more blood in less time and in this situation the heart reduces the relaxing period of 0.5 secs to 0.4 secs. Thus in this case the heart beats 82 times in 1 min and only 80% of blood gets purified.
On more n more demand the relaxing time is further reduced to 0.3 secs then only 60% of blood is purified.
Thus 20-40% of impure blood is pumped in the veins/ arteries.These impure components (cholestrol/lipid) gets deposited on the walls of arteries/ veins and thus the elastic nature of the veins and the arteries is lost. So they become plastic in nature.

After some time due to these conditions the veins/arteries become rigid.
Now if a blood clot travels through the veins/arteries (which in normal conditions gets easily passed due to the elastic nature earlier) gets blocked and resists blood flow in that area.
This results in a blockage which further results in Heart Attack.

From this discussion we realize that the main reason for heart problems is the increased demand of blood by the brain and body.
When the activity of brain is stimulated it demands more amount of blood than normal conditions.

To stimulate the activity of brain 25-30% of diet we take is responsible whereas the remaining 70-75% is due to the thinking, emotions, attitude, memories and other processes of the brain.

So those who want to keep their heart working effectively for a long period should protect themselves from worries, anger, sadness, emotional n sensitive behavior,  stress and hurry .

To protect ourselves from these few things there is no MEDICATION available!

So the only option is
MEDITATION.

So it is always said
-SPIRITUAL HEALING IS ONLY TRUE HEALING!

அக்கினி நட்சத்திரமும் பிரதோஷ பூஜையும்..!

அக்கினி நட்சத்திரமும் பிரதோஷ பூஜையும்..!  

வருடந்தோறும் கோடையில் வருகிற அக்கினி நட்சத்திரம் இன்று துவங்கி, இந்த மாதக் கடைசி வரை நீடிக்கிறது. 

ஆனால் நேற்றும் போன வாரமும் கூட கொளுத்தியெடுக்குது வெயில். 

அப்படியிருக்க,  அக்கினி நட்சத்திர வேளையில் அனல் கக்கப் போகிறது. 

அனல் தகிக்கும் இந்த பிரச்சாரமும் சுட்டெரிக்கும் அக்கினி நட்சத்திரமும் மத்தளம் போல் ரெண்டுபக்கமும் அடி பின்னிப் பெடலெடுக்கப் போகிறது.

 நல்லவேளையாக இன்று புதன்கிழமை 4-ம் தேதி பிரதோஷம். 

மாலையில், நமக்காகவும் நம் உறவுகளுக்காகவும் தோழமைகளுக்காகவும் நம்மூருக்காகவும் நம் தேசத்துக்காகவும் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். 

பால், தயிர், சந்தனம், பன்னீர் முடிந்த அளவு நந்திதேவருக்கும் சிவனாருக்கும் குளிரக்குளிர அபிஷேகம் செய்யுங்கள்.

கோடை மழை பெய்யவேண்டும் என மனம் குவித்து வேண்டிக் கொள்ளுங்கள். பூமி குளிரட்டும்.

நிலத்தடி நீர்மட்டம் சற்றே உயரட்டும்.

தகிக்கும் வெயிலில் இருந்து சற்றே தப்பிப்போம். இந்த பொது பிரார்த்தனையை, இன்றைய பிரதோஷத்தில் சிவனாரிடம் வையுங்கள்.

தென்னாடுடைய சிவனே

Thursday, 28 April 2016

Two Mantras To Keep Your Mind Healthy

Hanuman Chalisa:

The Hanuman Chalisa is a Hindu devotional hymn addressed to Hanuman.

It includes forty chaupais or verses on Hanuman that’s why the word chalisa comes which means chalis or forty.

The Hanuman Chalisa invokes something within — they are vibrations.


The Hanuman Chalisa removes obstacles.

Hanuman is strong and powerful and invokes power within.

So have belief and faith that something good will happen.

It’s a devotional practice, different from listening to songs. As you continue chanting, your heart starts to open.

Science cannot explain the effects of chanting.

The proof is that billions have benefited down the ages.

Things don’t stick around for so long, if they are not based on true knowledge.


Gayatri Mantra: 

Mantra is a path to purification of mind.

You can begin the mental purification by practising a very powerful mantra known as Gayatri Mantra.

This mantra is known for its cleansing effects on the mind.

The Gayatri Mantra must be pursued with great reverence and devotion.

The mantra is: Aum bhuur bhuvah svah Tat savitur varennyam Bhargo devasya dhimahi Dhiyo yo naha pracodayaat

The  mantra provides the practitioner with an opportunity to connect with the spirit and stay on the path of realising the Divine light.

Practice this mantra each morning after conducting your purification ritual for the body.

Gayatri Mantra brings the mind to a very calm place, and when the mind is calm, it breaks down all illusions, so it does not think, ‘I need this, or that, or do this or that’.

At that moment, you can talk to the spirit or god within.

Everybody is spiritual, but we allow the mind to take over.

Monday, 25 April 2016

அனுமனுக்கு வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள் ஏன் ?





அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.

ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்.

ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”

பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.

பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார். “பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால்,
வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து,

‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.

அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக
உணவை சாப்பிட்டு விடும் .

சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.

உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.

சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால்,
ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.

அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை
அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை
ஏற்பட்டது அனுமனுக்கு.

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில்
செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன்,
அவரை மிகவும் கவர்ந்து விட்டது.

மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு
உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.

வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும்
என்று விரும்பினார்.

வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை,
சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.

வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக
நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை.

சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.

அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து
எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ ,
அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும்,

தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான்
அனுமனிடம் தெரிவித்தார்.

இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.

அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.

அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை
அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால்,

ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும்.

இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.

தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.

இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன.

இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.

ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து,

அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது.

சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.

தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள்.

அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில்

இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள்.

அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன
ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.

எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள்
அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.

அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன..

மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி”

என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.

Nandhi Statue - நந்தி சிலை




 

சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும்.

இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிய ஆசைப்பட்டிருப்பீர்கள். அல்லவா?

உங்கள் ஆவலை பூர்த்தி செய்வதுதானே என் விருப்பம்.

இதோ... பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.

காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது.

அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார்.

நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார்.

இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார்.

நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது.

சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.

தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர்.

அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு.

அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.

இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இதனால் தீமைகள் அதிகம் நடக்கும்.

இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான்  நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா?

இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள்.

அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.

Friday, 15 April 2016

ராம நாம மஹிமை

ராம நாம மஹிமை 

 
பகவானை விடப் பகவான் ராம நாமத்திற்கு சிறப்பு அதிகம் என்று சொல்லுவார்கள்.
இதற்கு ஒரு கதைசொல்வதுண்டு.

காசியிலே ஒரு செல்வந்தர் இருந்தார். மிகச் சிறந்த வள்ளல்.

ஆனால் பூர்வ ஜன்மப் பலனாக அவரைத் தொழுநோய் பற்றிக்கொண்டது.

வாரி வாரி வழங்கிய அந்தச் செல்வரை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக அவரிடம் உதவிகள் பெற்ற பலரும் முன்வந்தனர். 

அந்தச் செல்வந்தரின் நோய் முற்றிப்போய் புழுக்கள் நெளியத்தொடங்கின.

தாம் யாருக்கும் பாரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. 

தனது நண்பர்களையும் ஆதரவாளார்களையும் அழைத்துத் தன்னைக் கங்கைக்கரைக்குக் கூட்டிச்செல்லச்சொன்னார். 

தான் கங்கையில் ழூழ்கி இறந்துவிட போகவதாகவும் தன் மேல் உண்மையான அக்கறை இருந்தால் ஒரு கல்லை அவர் உடலில் கட்டும் படியும் வேண்டினார். 

அவர்மேலும் மேலும் வற்புறுத்தவே அவருடைய இடுப்பில் ஒரு கல் கட்டப்பட்டது.

அவரைச் சுற்றி நின்றவர்கள் அழுதுகொண்டிருந்தனர். 

அந்நேரம் அங்கே கபீர்தாசைன் சீடர் பத்மநாபர் என்னும் பெயருடையவர் வந்தார். 

அங்கே என்ன நடக்கிறது என்று விசாரித்தார் நடப்பதை அறிந்ததும் அங்கிருந்தவர்களிடம் 'நான் சொல்கிறப்டி நீங்கள் செய்தால் அவரை காப்பாற்றிவிடலாம். செய்வீர்களா ?'' என்று கேட்டார்.

'எங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுக்கிறோம் ' என்றனர் சிலர்.

 'ஒரு உயிரைக் காப்பாற்றவேறு உயிர்கள் தேவையில்லை. 

நீங்கள் எல்லோரும் ஒரே மனத்துடன் நான் சொல்லுவதை ழூன்றுமுறை திருப்பிச் சொல்லவேண்டும்' என்றார்.

'சரி' என்றார்கள் உடனே அவர் எல்லோரையும் எழுந்து நின்று கைகூப்பிக்கொண்டு ழூன்று முறை ராம நாமத்தைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார். 

'ஏற்கனவே இராமர் கோவிலுக்குச் சென்று பிரார்த்திதோம்.

ஏதும் நடக்கவில்லை' என்றார்கள்.

'ராமனைத் தொழுது நடக்கவில்லையென்றால் இராம நாமத்தால் நடக்கும்.முயன்று பாருங்களேன்' என்றார். 

அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரே சிந்தையோடு ழூன்று முறை இராமநாமத்தைக் கூறினர்.

செல்வந்தர் இடுப்பில் கட்டிய கல் அறுந்துவிழுந்தது. அவரது நோய் நீங்கப்பெற்று புலிப்பொலிவுடன்விளங்கினார். 

எல்லோரும் பத்மநாபரைப்போற்றினர்.எல்லாம் குருவருள் என்றார் அவர். 

எல்லோரையும் அழைத்துக்கொண்டுகபீர்தாஸரிடம் சென்றார். 

எல்லாவற்றையும் கேட்டகபீர்தாசர்மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாகக் கோபம் கொண்டார்.பத்மநாபரைப் பார்த்து.

 'நீ என்னிடம் கற்றுக்கொண்டதுஇவ்வளவு தானா? இராம நாமத்தை ஒருமுறை சொன்னாலே போதுமே ! அவர் குணமாகியிருப்பாரே !.

அதன் திறமையை அறியாமல்ழூன்று முறை சொல்லச் செய்து இராமநாமத்தின் பெருமையை குறைவாக மதிப்பிட்டுவிட்டாயே'என்றார் கபீர்தாசர்.

'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும பாவமும் சிதைந்து தேயுமேஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே'ராம' என்றிரண்டெழுத்தினால்'நல்லன எல்லாம் தரும் 'ராம' நாமத்தை நாளும் நாம் ஜபிப்போமாக!

'ராம' நாம மஹிமை தொடரும்...ஜெய் ஸ்ரீ ராம் !!

26 GODS in Sri Gayathri Manthra

HOW MANY DEITIES ARE MENTIONED IN SRI GAYATHRI MANTHRA?

There are 26 GODS in Sri Gayathri Manthra

Tat   -  Ganesh
Sa   -  Narasimha
Vi    -   Vishnu
Tu   -   Siva
Va -   Krishna
Re -   Radha
Ni -    Lakshmi
Yam - Agni
Bha -  Indra
Rga -  Saraswathi
De -     Durga
Va -     Hanuman
Sya -    Pruthvi
Dhee -  Surya
Ma -      Sriram
Hi -        Seetha
Dhi -      Chandra
Yo -        Yama
Ya -        Brahma
Na -        Varuna
Cho -      Hayagreeva
Da -         Hamsa
Yaat -      Tulasi

One should Chant 1008 Times or 108 Times or 28 Times or at least 10 Times

Sri Gayathri has Fire in Face, Brahma the Creator in Forehead, Vishnu the Protector in Heart and Shiva the Destroyer on top of Head.

So its a Combination of all GODS.

Sri Gayathri Manthra should be Chanted 3 Times a day.

GODDESS Sri Gayathri confers the Boon of Intelligence as Gayathri, Protection as Savithri and Learning as Saraswathi.
Gayathri is therefore called Sarvadevatha Swarupini.


குலதெய்வங்கள் என்றால் என்ன ..?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?

 அவர்களின் பெருமை என்ன ..?

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது ..?

நமது குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.
மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.

சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தி அளவிடமுடியாதது ..!

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் "குலதெய்வங்கள்" என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. 

குலதெய்வங்கள் கர்மவினைகளையும் கூட நீக்க வல்லவை.

இன்று நம் அவசர வாழ்க்கையில் , இரண்டு தலைமுறை பாட்டன், பாட்டியின்  பெயர்களுக்கு மேல் நிறைய பேருக்கு தெரியாமல்  உள்ளது .

நம் முன்னோர்கள்...

அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை.

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்..!

இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..!

நாம் அங்கே போய் நின்று , அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம் தெரியுமா ..!
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ..!

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் நாம் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தந்தையின் குரோமோசோம் தான் முடிவு செய்கிறது.

பெண்ணுக்கு xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

ஆணுக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. பெண்ணின் x உடன் ஆணின் y சேர்ந்தால் ஆண் குழந்தையும் ; இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. 

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. 

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன.

அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது. வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு, தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம்  அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்..!

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்..!

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்.

அதனால் ஏற்கனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பெண்களுக்கு, பிறந்த வீட்டில் ஒன்று  புகுந்த வீட்டில் ஒன்று என இரண்டு  தெய்வங்கள். 

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். 

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். 

இதுவரை பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் யாரேனும் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

எல்லாம் சரி , ஆனால் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் என்ன செய்வது ..?

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.
பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர்.

ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பு.

மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம் எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர்.

இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள்.

அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம்.

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள் ..! (குறைந்தது வருடம் ஒரு முறையாவது)

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள் ..!

அக்கோவிலுக்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..!!!

தெய்வத்தின் அருளுடன் வாழ்க வளமுடனும் நலமுடனும் ..!!!


16 லட்சுமிகளும் அவர்களின் சிறப்புக்களும்...!!!

16 லட்சுமிகளும் அவர்களின் சிறப்புக்களும்...!!!

எட்டு வகையான லட்சுமிகளைத்தான் நாம் கேள்விப்பட்டிருப் போம். உண்மையில் பதினாறு (16) வகை லட்சுமிகள் உண்டு. அந்த பதினாறு (16) வகையான லட்சுமிகளின் பெயர்களும், அவர் களின் சிறப்புக்களும்!

1. ஸ்ரீ தனலட்சுமி:-
நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமி யின் அருளை பரிபூரணமா கப் பெறலாம்.

2. ஸ்ரீ வித்யாலட்சுமி:-
எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப் பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண் டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதை யும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீ தான்யலட்சுமி:-

ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசி யோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீ வரலட்சுமி:-
உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ் வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்ட வர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்யமாட்டேன் என்ற மன உறுதி யுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீ சவுபாக்யலட்சுமி:-
ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கவேண்டும். பிறர் மனது நோகா மல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழ லாம்.

6. ஸ்ரீ சந்தானலட்சுமி:-
எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய் மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீ காருண்யலட்சுமி:-
எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர் வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமி யின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீ மகாலட்சுமி:-

நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறு தியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகா லட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை
வழங்குவாள்.

9. ஸ்ரீ சக்திலட்சுமி:-
எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதை யும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீ சாந்திலட்சுமி:-
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சம மாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொ ழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீ சாயாலட்சுமி:-
நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போ ல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார் க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி:-
எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறரு க்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீ சாந்தலட்சுமி:-
பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறு மையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீ கிருத்திலட்சுமி:-
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப் படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீ விஜயலட்சுமி:-

விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொ ழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி:-
நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறு மை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகு ந்துவிடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.



சித்திரை மாதத்தின் விசேஷ நாட்கள்!

சித்திரை மாதத்தின்  விசேஷ நாட்கள்!


  • 15.4.16 -- வெள்ளி & ஸ்ரீராம நவமி.
  • 17.4.16 -- ஞாயிறு & ஏகாதசி
  • 19.4.16 -- செவ்வாய் & பிரதோஷம்,  சமயபுரம் மாரியம்மன்,  திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்
  • 21.4.16 -- வியாழன் & சித்ரா பௌர்ணமி.
  • 22.4.16 -- வெள்ளி & கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல், வாஸ்து நாள்.
  • 23.4.16 -- சனி  & திருவையாறு சப்த ஸ்தான விழா.
  • 25.4.16 -- திங்கள் & அனுஷம். சங்கடஹர சதுர்த்தி.
  • 27.4.16  -- புதன் & ஸ்ரீவராஹர் ஜயந்தி.
  • 29.4.16  -- வெள்ளி & சிதம்பரம் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களில் முதல் அபிஷேகம்.
  • 1.5.16 -- ஞாயிறு & சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸம்வத்ஸராபிஷேகம்.
  • 2.5.16 -- திங்கள் & அப்பர் சுவாமிகள் குருபூஜை.
  • 3.5.16 -- செவ்வாய் & ஏகாதசி
  • 4.5.16 -- பிரதோஷம். அக்கினி நட்சத்திரம் ஆரம்பம். ஸ்ரீரமண ஜயந்தி.
  • 5.5.16 -- வியாழன் & ஸ்ரீரங்கம் தேரோட்டம்.
  • 6.5.16 -- வெள்ளி & அமாவாசை.
  • 9.5.16 -- திங்கள் & அட்சய திருதியை. கும்பகோணம் 12 கருட சேவை.
  • 10.5.16 -- செவ்வாய் & ஸ்ரீராமானுஜர் ஜயந்தி. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் பூச்சொரிதல்.
  • 11.5.16 -- புதன் & பஞ்சமி திதி. ஸ்ரீஆதிசங்கரர் ஜயந்தி.
  • 12.5.16 -- வியாழன் & ஸ்ரீதியாக பிரம்ம ஜனன உத்ஸவம்.

Thursday, 4 February 2016

மகாமகம்

மகாமகம்

தேதி : 22.02.2016
 நேரம்: பிற்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை

மகாமகம் உருவாகுதல் இந்திய திருநாட்டில் உள்ள மாநிலங்களில்
திருக்கோயில்களுக்கு பிறப்பிடமாக  பெரிதும் விளங்குவது தமிழகம் ஆகும்.

இத்தமிழக மக்களை வாழ வைக்கும் நதிகளில் ஒன்றானதும் தஞ்சைத் தரணியை வளம்கொழிக்கச் செய்வதுமான காவிரி தாயும், அரசலாறும் மாலையிட்டது போல் சூழப்பெற்றது தான் குடந்தை மாநகரம்.

இந்நகரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகப்பெருவிழா வருகிற 22.02.2016ம் தேதி அன்று சூரியன்
 கும்பராசியிலும் குரு சிம்ம ராசியிலும்
 வரும் போது பெளர்ணமியில் மக நட்சத்திரம் அன்று இடப லக்னத்தில் சேரும் புனித நாளில் நடைபெற உள்ளது

அன்றைய தினம் பதினான்கு உலகங்களிலும் உள்ள தேவர்கள்
யாவரும் புனித நீராட வருகிறார்கள் என்பது வரலாறு.

இறைவனுடைய உபதேசங்களே வேத சாஸ்திரங்கள்.

அவைகளில் மனிதர்களின் பாவங்களை போக்கிக் கொள்ள பல வழிகள் கூறப்பட்டுள்ளன.

அவ்வழிகளில் தீர்த்த ஸ்நானம் மிகச் சிறந்த ஒன்றாகும். அதிலும் மகாமகத்தினத்தன்று மகாமகக் குளத்தில் புனித நீராடுதலுக்கு ஈடானது
 ஒன்றுமில்லை.

இப்புனித மகாமகம் நடைபெறுவதற்கான புராண வரலாறு ஒன்று உண்டு.

ஒரு சமயம் கங்கை முதலான ஒன்பது  புண்ணிய நதிகள் ஒன்று சேர்ந்து கயிலாய  மலை சென்று சிவபெருமானை வணங்கி,  எங்களிடத்தில் மகாபாவிகளும், மிகப்பெரிய பாதகங்களைச் செய்தவர்களும், நீராடி எல்லா பாவங்களையும் எங்களிடம் விட்டு விட்டு நற்கதி அடைந்து  வருகிறார்கள்.

எங்களிடம் விட்ட பாவங்களை  நாங்கள் எங்கு சென்று போக்கிக் கொள்வது என்று கேட்டார்கள்.

அப்போது இறைவன் தீர்த்த தேவதைகளிடம் கீழ்க் கண்டவாறு கூறினார்.

திருக்குடந்தையில் மகாமகத்தன்று மகாமக் குளத்தில் நீராடுங்கள்.

உங்கள் பாவங்கள் அனைத்தும் உங்களைவிட்டு விலகுவதோடு, அவர்களிடமிருந்தும் பாவங்ளை விலகிவிடும் என்றார்.

உடனே ஒன்பது தீர்த்தங்களும் கன்னிகை வடிவெடுத்து திருக்குடந்தை வந்து மகாமகக்குளத்தில் புனித நீராடி, வடகரையில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் வந்தமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த மகாமக தீர்த்தத்தை ஒரு தடவை வணங்கினால் எல்லா தேவர்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

இந்த மகாமகக் குளத்தை ஒரு முறை சுற்றி வந்தால், இந்த பூமியை நூறு முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும்.

இந்த மகாமகக் குளத்தில் ஒரு தடவை நீராடினால் கங்கையில் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மூன்று காலமும் நீராடிய பலன் கிடைக்கும்.

இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தில் வடபுறத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு தனது கோத்திரம். மனைவியின் கோத்திரம், மாதா மகன் கோத்திரம், ஆகிய ஏழு கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள் (ஏழு தலைமுறைகளுக்கு)  நற்கதிஅடைவர்.

வடபுறத்தில் உள்ள கிணற்றில் மகாமகத்தன்று காசியிலிருந்து  கங்கை வருகிறது.

அங்கு பல குமிழிகள்  இடப லக்னத்தில் ஏற்படுவதைக் காணலாம்.

இந்தக் குளத்தில் 16 கிணறுகள் உள்ளன 20 தீர்த்தங்கள் உள்ளன.

இந்திய திருநாட்டில் கும்பமேளாக்கள் புனித நதிகளில் மட்டுமே நடந்து வருகிறது.

கும்பகோணத்தில் நடைபெறும்  புனித நீராடல் விழா மகாமகத் திருக்குளம்
 மற்றும் காவிரி நதிக்கரையில்  நடைபெறுவதால் இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாக்களில் இது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது மகாமகக் குளத்தில் நீராடுமுன் காவிரியில் சங்கல்பம் செய்து நீராட வேண்டும்.

மகாமகத்தன்று அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர், அருள்மிகு காசி  விசுவநாதர். அருள்மிகு அபிமுகேஸ்வரர். அருள்மிகு கெளதமேஸ்வரர், அருள்மிகு
 ஏகாம்பரேஸ்வரர், அருள்மிகு நாகேஸ்வரர், அருள்மிகு சோமேஸ்வரர், அருள்மிகு ஆதிகம்பட்டவிசுவநாதர், அருள்மிகு கோடீஸ்வரர், அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அருள்மிகு பாணபுரீஸ்வரர், அருள்மிகு
 அமிர்தகலசநாதர் ஆகிய பன்னிரண்டு சைவ தலங்களுக்கும், அருள்மிக சார்ங்கபாணி, அருள்மிகு இராமசாமி, அருள்மிகு ஹனுமார், அருள்மிகு
 சாரநாராயணப்பெருமாள், அருள்மிகு  ஆதிவராகபெருமாள் திருக்கோயில்,
 அருள்மிகு இராஜகோபால சுவாமி  திருக்கோயில் அருள்மிகு சக்கரபாணி
 பெருமாள் ஆகிய ஏழு வைணவத்  தலங்களுக்கும் சென்று வணங்குவது அதிகபலனைத் தரும்.

மேலே குறிப்பிட்ட பன்னிரண்டு சைவத் தலங்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி மகாமகக்குளம் சென்று தீர்த்தம் ஆடும்.

அதே போல் ஐந்து தலங்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு காவிரி சென்று தீர்த்தம் ஆடும்.

எனவே இந்த தீர்த்தவாரி நடைபெறும் புனித நாளான 22.02.2016 அன்று திருக்குடந்தை வாருங்கள்;

புனித  நீராடுங்கள்; பிறவிப் பெறும் பயன்  பெறுங்கள்.

Tuesday, 17 November 2015

பூலோக வைகுண்டம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் திருத்தலம் நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது.

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், பெரியாழ்வாரின் மாப்பிள்ளை என்று புராணம் கூறுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது.

தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேளதாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணு வார்கள்.

மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய் தூள் ஆகியவற்றை பெருமாள் சார்பாக வழங்குவார்கள்.

தீபாவளிக்கு முந்தைய இரவு உற்சவர் நம்பெருமாளுக்கும் எண்ணெய் அலங்காரம் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து கோவிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதி களுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய்த் தூள், விரலிமஞ்சள் ஆகியவை பெருமாள் சார்பாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்குப் புத்தாடை, மலர் மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள்.

அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு, பெரிய சந்நிதிக்குக் கிழக்கில் உள்ள கிளிமண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.

அப்போது பெருமாளின் மாமனார்- பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகக் காத்திருப்பார்.

பெரிய சந்நிதியில் அருள்புரியும் உற்சவர் நம்பெருமாள் காலை பத்து மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத் துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார்.

இந்த நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் (ஸ்ரீஆண்டாளின் வளர்ப்புத் தந்தைதான் பெரியாழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.) தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.

பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்கும் வழக்கம் இன்றுவரை மிகச்சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும்.

அப்போது வேதபாராயணங்கள் முழங்க, மங்கள வாத்தியம் வாசிக்கப்படும்.
இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர்.

ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது.
இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள் கோவிலின் இரண்டாம் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

தீபாவளி சீர் பெற்ற பெருமாள், மீண்டும் சந்தனு மண்டபம் வருவார்.
மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை பக்தர் களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார்.

அதன்பின், கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பெருமாள்முன் எழுந்தருளி, பெயர் சொல்லி அழைக் கப்படுவார்கள்.

அப்போது பெருமாள், அவர்களுக்குப் புதுவஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார்.

பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார் கள் மற்றும் ஆச்சாரியர்கள், பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கநாயகித் தயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் கலந்துகொள்ள மாட்டார்கள்.

இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.

Sunday, 15 November 2015

செல்வம் மூன்று வகைகளில் வரும் .............

செல்வம் மூன்று வகைகளில் வரும் .............
1. லட்சுமி செல்வம்,
2. குபேர செல்வம்,
3. இந்திர செல்வம் எனப்படும்.
லட்சுமி செல்வம்......

பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள்.

மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள். இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல. இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும்.

லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.

குபேர செல்வம்........

குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.

குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.

எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.

இந்திர செல்வம்.........

போகி என்ற பண்டிகையை இந்திரனை முன் வைத்தே கொண்டாடுகிறோம். கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரன், தேவர்களின் தலைவனும் கூட, இந்திரனைப் பிரார்த்திப்பவர்கள் வெகு சிலரே. பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை இந்திர சம்பத்தின் அடையாளங்கள்.

இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது. சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்