Wednesday, 5 August 2015




சந்திராஷ்டமம் என்றால் என்ன :
 
அது என்ன செய்யும்?‎

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும்.‎

இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும்.‎

சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.‎

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால்,‎
அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். =, உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் ‎நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம்.

அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் ‎காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.‎

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ‎ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், ‎வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. ‎ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள்.‎

மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் ‎வைப்பார்கள், பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ‎சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். 

புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள் . புதிய ஒப்பந்தங்களை ‎தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் ‎பேச மாட்டார்கள் . ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் ‎உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், ‎மனதை ஆள்பவன்.

ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும். ‎அந்த குறிப்பிட்ட நட்சத்திர வரும் நாட்களில், நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.‎

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்.‎

அஸ்வினி - அனுஷம்

பரணி - கேட்டை

கிருத்திகை - மூலம்

ரோகிணி - பூராடம்

மிருகசீரிஷம் - உத்திராடம்

திருவாதிரை - திருவோணம்

புனர்பூசம் - அவிட்டம்

பூசம் - சதயம்

ஆயில்யம் - பூரட்டாதி

மகம் - உத்திரட்டாதி

பூரம் - ரேவதி

உத்திரம் - அஸ்வினி

அஸ்தம் - பரணி

சித்திரை - கிருத்திகை

சுவாதி - ரோகிணி

விசாகம் - மிருகசீரிஷம்

அனுஷம் - திருவாதிரை

கேட்டை - புனர்பூசம்

மூலம் - பூசம்

பூராடம் - ஆயில்யம்

உத்திராடம் - மகம்

திருவோணம் - பூரம்

அவிட்டம் - உத்திரம்

சதயம் - அஸ்தம்

பூரட்டாதி - சித்திரை

உத்திரட்டாதி - சுவாதி

ரேவதி - விசாகம்