அமாவாசை நாளில் என்ன செய்யலாம்? - ஜோதிடர் பதில்கள் !
1. அமாவாசை அன்று எந்த காரியங்களை செய்யலாம்?
அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம்.
அமாவாசை அன்று பித்ருக்களை வழிபட உகந்த நாள்.
சுப காரியங்களுக்கு அமாவாசை ஏற்ற நாள் அல்ல.
2. சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
தீட்சை பெற்றவர்கள் மட்டுமே சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வணங்க வேண்டும்.
மற்றவர்கள் ஒரு அடிக்கு கீழே உள்ள சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வணங்கலாம்.
சிலைகளை வைத்து வணங்கும்போது தினமும் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
3. ஆயில்யம் நட்சத்திரத்தின் நன்மைகள்?
ஆயில்ய நட்சத்திரம் உடையவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்பை கொண்டவர்கள்.
இவர்கள் பொறுமையாக இருப்பார்கள், சுகபோகங்களில் ஆசையுடையவர்கள்.
4. வீட்டில் வளர்க்கும் நாயை மற்றவர்களுக்கு தரலாமா?
வீட்டில் வளர்க்கும் நாயை மற்றவர்களுக்கு தரலாம்.
நாயை வாங்குபவரை பற்றி கொடுப்பவர் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில்
வாங்கியவர் அந்த நாயை கொடுமைப்படுத்தினால், அந்த பாவம் நாயை கொடுத்தவரையே
சாரும்.
நாய் என்ற ஜீவன் கால பைரவரின் வாகனமாகும்.
5. கோவில் படிகட்டில் இருந்து கீழே விழுவது போன்று கனவு கண்டால் என்ன பலன்?
கோவில் படிகட்டில் இருந்து கீழே விழுவது போல் கனவு வருவது, இதுவரை நீங்கள்
யாரை நம்பினீர்களோ அவர்கள் உங்களை ஏமாற்ற போகிறார்கள் என்பதை
குறிப்பதாகும்.
எனவே அனைவரிடமும் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
நண்பர்களிடத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
1. அமாவாசை அன்று எந்த காரியங்களை செய்யலாம்?
2. சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
3. ஆயில்யம் நட்சத்திரத்தின் நன்மைகள்?
4. வீட்டில் வளர்க்கும் நாயை மற்றவர்களுக்கு தரலாமா?
5. கோவில் படிகட்டில் இருந்து கீழே விழுவது போன்று கனவு கண்டால் என்ன பலன்?