பெருமாளுக்கு உகந்த துளசி தீர்த்தத்தின் மகிமை..!
துளசி தீர்த்தத்தின் மகிமை..!
பெருமாளுக்கு உகந்தது துளசி. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு.
அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை.
வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம்,
மிக விஷேசம், பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு
தரும் புத்துணர்ச்சியும் அலாதியானது. பெருமாளுக்கு உகந்த
தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால்
போற்றப்படுவது.
அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக
அணிவிப்பதிலும், பூஜைகளுக்கு பொது அர்ச்சனைக்காகவும் துளசியிலை
முக்கியத்துவம் பெறுகிறது. பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு
தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து
வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால்
அதைப்புண்ணிய ஜலம் என்று கூறுகின்றனர்.
துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக
கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள். துளசிமாடம் கட்டி
விளக்கேற்றிப் பராமரிக்கிறார்கள். கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம்
மருத்துவ குணங்கள் உடையது. துளசி தீர்த்தத்திற்காக கோவிலுக்கு செல்ல
வேண்டியதில்லை. வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயார்செய்யலாம்.
சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும்.
வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயாரிக்கும் முறையை நம் மூதாதையர்கள்
கைக்கொண்டிருந்தனர். ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் எடுத்து அதில்
நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளை பறித்து போட்டு வைத்து தீர்த்தமாக
உபயோகிக்கலாம்.
துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள்
கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. துளசி இலையின் நுனியில் நான்
முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில்
பனிரெண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு
அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே
இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால்
எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை
நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால்
இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.
துளசி ஆராதனை துதி!
நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா
நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா!
குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுவதால், சர்வ மங்களங்களும் சித்திக்கும்.
துளசி தீர்த்தத்தின் மகிமை..!
![]() |
kolam100.blogspot.in |
துளசி ஆராதனை துதி!
நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா
நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா!