எலுமிச்சையில் விளக்கு ஏற்றலாமா? - ஜோதிடர் பதில்கள் !
ஜோதிடர் பதில்கள் !
1. வீட்டில், எலுமிச்சையில் விளக்கு ஏற்றலாமா?
வீட்டில், எலுமிச்சையில் விளக்கு ஏற்றக்கூடாது.
எலுமிச்சை என்பது ராஜ கனி, எனவே கனியை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது சாலச் சிறந்தது.
கனிகளில் தீபம் போடுவதை தவிர்க்கவும்.
அகல் விளக்கு தீபமே இறைவனுக்கு சிறந்தது.
2. கழுகு தலையில் கொத்தியதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?
கழுகு தலையில் கொத்தினால் பயணங்களில் கவனம் தேவை. கூட்டுத் தொழில் செய்வோராயின், கூட்டாளிகளிடம் கவனம் தேவை.
தனிமையாக இருப்பதை தவிர்த்தல் நலம்.
3. ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?
ரஜ்ஜு பொருத்தம் என்பது மாங்கல்ய பொருத்தம் ஆகும்.
மாங்கல்ய பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்யக் கூடாது.
ஆயுள் பொருத்தம் இருவருக்கும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.
4. நாகதோஷம் உருவாக காரணம் என்ன?
சர்ப்பங்களை கொன்றவர்களுக்கும், பிறரின் வருமானத்தை கெடுத்தவருக்கும்,
மற்றவர்களின் குடும்ப பிரச்சனைகளில் தலையிட்டு தவறான தீர்ப்புகளை
சொன்னவர்களுக்கும் மற்றும் பேச்சினால் மற்றவர்களின் மனதை
கஷ்டப்படுத்தியவருக்கும் நாகதோஷம் உண்டாகும்.
5. நாக தோஷத்திற்கான பரிகாரம் என்ன?
சர்ப்பங்களை வழிபடவும்.
சர்ப்ப சிலைகளை பிரதிஷ்டை செய்யலாம்.
மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது சிறப்பு.
சர்ப்பங்களுக்கு அதிபதியான விநாயகரை வழிபடுவது சிறப்பு.
6. வலது கால் சுண்டுவிரலில் பல்லி விழுந்தால் பலன் என்ன?
வீடு சுத்தமாக இல்லாமல் இருப்பது பல்லியின் வரவை குறிக்கிறது. எனவே வீட்டை வருடம் ஒரு முறையாவது வெள்ளையடிக்க வேண்டும்.
வலது காலின் சுண்டு விரலில் பல்லி விழுவது உடல் ஆரோக்கியமின்மையை குறிக்கிறது.
வலது பாதங்களில் பல்லி விழுவது அரசுக்கு அபராதம் கட்டுவதைக் குறிக்கிறது.
ஜோதிடர் பதில்கள் !
1. வீட்டில், எலுமிச்சையில் விளக்கு ஏற்றலாமா?
2. கழுகு தலையில் கொத்தியதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?
3. ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?
4. நாகதோஷம் உருவாக காரணம் என்ன?
5. நாக தோஷத்திற்கான பரிகாரம் என்ன?
6. வலது கால் சுண்டுவிரலில் பல்லி விழுந்தால் பலன் என்ன?